சின்னத்திரை சீரியல் நடிகைகளின் மிகவும் பிரபலமானவர்தான் திவ்யா ஸ்ரீதர். இவர் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் நிலையில் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் அர்ணவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அதன் பிறகு இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நிலையில் சிறிது நாட்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் பயங்கரமான கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை எழுந்தது.

இவர்களின் பிரச்சினை பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் எதையும் சகித்துக் கொள்ள முடியாமல் இருந்த திவ்யா பல குற்றச்சாட்டுகளை வைத்ததால் போலீசாரால் அர்ணவ் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கர்ப்பமாக இருந்த திவ்யாவுக்கு அன்னையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பல பிரச்சனைகளுக்கு நடுவே குழந்தை பெற்றுக் கொண்ட திவ்யா ஸ்ரீதர் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்தினார். அந்த விழாவில் சீரியல் நடிகர் நடிகைகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Srithika இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@srithika_saneesh)