கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 24 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததால் இளம்பெண் கூச்சலிட்டார். அதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் தப்பி சென்றார். இதுகுறித்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் கோகுல கிருஷ்ணன் என்பவர் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது தெரியவந்தது. மேலும் போலீசாருக்கு பயந்து செல்போனில் இருந்த வீடியோக்களை கோகுலகிருஷ்ணன் அளித்துள்ளார். இதனால் கோகுலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.