குல்ஃபி ஐஸ் சாப்பிட்ட 65 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு விற்பனையாளரிடம் குல்ஃபிகளை வாங்கிச் சென்ற குழந்தைகள், அதை சாப்பிட்டவுடன் வயிற்றுவலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, 50 குழந்தைகள் குணமடைந்துள்ளனர். மேலும் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.