மும்பையில் காதலி சரஸ்வதியை (36). காதலன் மனோஜ் (56) வெட்டி கொலை செய்த வழக்கில் அதிர்ச்சிகர வாக்குமூலம் கொடுத்துள்ளார். காதலியின் உடலை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வறுத்து சமைத்து அதை அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். டெல்லியில் காதலி ஷரத்தாவை காதலன் ஒருவர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்ததை பார்த்து, தானும் அவ்வாறு செய்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும் அந்நோய் நிச்சயம் காதலியையும் தாக்கியிருக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஒருவேளை தான் இறந்தபின் காதலி கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இப்போதே கொன்றுவிட்டதாக மனோஜ் தெரிவித்திருக்கிறார்.