கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தமிழகத்தில்  நடைபெற்றதுத. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் இத்தேர்வை எழுதினார்கள்.

இந்நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என TNPSC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன பயிற்சியாளர் பணிகள், புள்ளியல் துறை, நூலகர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.