கடந்த 2 தினங்களாக உச்சம் தொட்டு வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி 1 கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெளிச்சந்தையில் ரூ.70 முதல் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியை பதுக்கி வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசின் நடவடிக்கையால் இன்று தக்காளி விலை குறைந்துள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். அதில், “விலை ஏற்றம் நீடிக்குமானால், தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளது. பகுதிகளுக்கு ஏற்ப நியாய விலைக் கடைகளிலும் குறைந்த விலையில் காய்கறிகளை விற்க ஏற்பாடு செய்யப்படும். தக்காளி மட்டுமல்ல அனைத்து காய்கறிகளின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என கூறினார்.