யுவராஜ் சிங் மீண்டும் தந்தையானதை முன்னிட்டு ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், 2007 டி20 உலகக் கோப்பை வீரருமான யுவராஜ் சிங் தனது ரசிகர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியை அளித்துள்ளார். இரண்டாவது முறையாக தந்தையாக பதவி உயர்வு பெற்றார். சமீபத்தில் யுவராஜின் மனைவி ஹேசல் கீச்க்கு பெண் குழந்தை பிறந்தது. யுவராஜ் தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டபோது அது வைரலானது. இந்த பதிவை சில நிமிடங்களில் லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். மேலும் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

யுவராஜ் சிங் தனது ட்வீட்டில், ‘எங்கள் குட்டி இளவரசி ஆராவை வரவேற்கிறோம்.. அவருக்காக கழித்த தூக்கமில்லாத இரவுகள் இப்போது மகிழ்ச்சியாக மாறியுள்ளது’ என்று கூறியுள்ளார். இந்த புகைப்படத்தில், யுவராஜ் சிங் தனது மகளை ரசிப்பது போல் தெரிகிறது. மறுபுறம், ஹேசல் கீச்சின் கைகளில் ஒரு மகன் இருக்கிறான். யுவராஜ் சிங் மீண்டும் தந்தையானதை முன்னிட்டு ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யுவராஜ் சிங் மற்றும் மாடல் அழகி ஹேசல் கீச் இருவரும் 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இந்த விழாவில் விராட் கோலி, புஜாரா, கருண் நாயர் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். யுவராஜ் தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகு, 2022ல் ஆண் குழந்தை பிறந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பெண் குழந்தை பிறந்தது.

2019-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த யுவராஜ், 2007-ல் டி20 உலகக் கோப்பையையும், 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையையும் இந்திய அணி வெல்வதில் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்ததை ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது.. 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டார். பேட்டிங்கில் 362 ரன்கள் குவித்த அவர், பந்துவீச்சில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் தொடர் நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.