தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அரசு மாநிலத்தின் நிதி நிலைமையை சரி செய்த பிறகு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம் தமிழ்நாடு பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக 50 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.