தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.

அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் தரப்பு தமிழகத்தைப் போல தெலுங்கானாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 2500 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.