மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜுலை 24ஆம் தேதி தர்மபுரியில் தொடங்கி வைத்தார். முதற்கட்ட முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து இரண்டாம் கட்ட முகாம்கள் இன்று (16ஆம் தேதி) வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமுடன் சேர்த்து இதுவரை 1 கோடியே 54 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.