நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில் டெல்லியில் குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த குடியரசு தின விழாவில் பிரதமர் மோடியின் உடை மற்றும் தலைப்பாகை அனைவரையும் கவர்ந்தது. பிரதமர் மோடி முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது எப்போதும் வித்தியாசமான உடைகள் மற்றும் தலைப்பாகை அணிவது வழக்கம். அந்த வகையில் தற்போது குடியரசு தின விழாவில் ராஜஸ்தானி தலைப்பகையை அணிந்திருந்தார்.

கடந்த வருடம் பிரதமர் மோடி மணிப்பூர் மற்றும் உத்தரகாண்டின் பிரத்யேகமான தலைப்பாகை அணிந்திருந்தார். இந்த வருடம் பிரதமர் மோடி தலைப்பாகையுடன் சேர்த்து துண்டு ஒன்றையும் அணிந்திருந்தார். இந்நிலையில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு பிரதமர் மோடி குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் குடியரசு தின விழா நிறைவடைந்த பிறகு பிரதமர் மோடி கையேசித்துக் கொண்டே சென்ற நிலையில், அங்கிருந்த பார்வையாளர்கள் பாரத் மாதா கி ஜே. பிரதமர் மோடி மோடி என்று கோஷமிட்டனர்.