குடிமகன்களை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த ஹெல்த் வாக் என்ற நடைபயிற்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் மதுப்பழக்கத்தை குறைக்க முதலமைச்சர் ஒரு தீர்வு வழங்கி இருக்கிறார். அதாவது, மதுக்கடைக்கு வரும் புதிய நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க வேண்டுமென முதல்வர் கூறி இருக்கிறார்” என்றார்.