சினிமா நடிகர் மற்றும் டிக் டாக் பிரபலம் டான்சர் ரமேஷ். இவர் நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார். இவர் நேற்று சென்னை புளியந்தோப்பில் உள்ள கேபி பார்க் குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மாடியில் இருந்து கீழே குதித்த நிலையில் அவர் குதித்த இடத்தில் ரத்தம் எதுவும் இல்லை என அப்பகுதி மக்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் ரத்தம் எதுவும் கீழே இல்லாததால் டான்சர் ரமேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்நிலையில் டான்சர் ரமேஷுக்கு இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில் முதல் மனைவி சித்ராவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

அதன் பிறகு இரண்டாவது மனைவி இன்பவள்ளி என்பவருடன் கேபி பார்க் குடியிருப்பில் டான்சர் ரமேஷ் வாழ்ந்து வந்த நிலையில், நேற்று அவருடைய பிறந்த நாளின் போது திடீரென மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று பிறந்த நாளின் போது இன்பவள்ளி மது குடிப்பதற்கு ரமேஷுக்கு பணம் கொடுக்காததால் விரக்தியில் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால் ரமேஷின் முதல் மனைவி சித்ரா தன்னுடைய கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் ரமேஷின் சகோதரர் தன்னுடைய அண்ணன் எவ்வளவு கொடுத்திருந்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அதிர்ச்சிகரமான முடிவை எடுக்க மாட்டார் என்று கூறியுள்ளார். இதனால் ரமேஷின் மரணத்தில் பல்வேறு மரணங்கள் நீடிக்கும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.