புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூரில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு(10) என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருக்கும் பிடாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கோவில் திருவிழாவை முன்னிட்டு பட்டாசுகள் வ/வெடிக்கப்பட்டது. சில பட்டாசுகள் வடிக்காமல் அந்த பகுதியிலேயே கிடந்தது.

இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த விஷ்ணு வெடிக்காமல் கிடந்த பட்டாசை எடுத்து பற்ற வைத்துள்ளார். அப்போது பட்டாசு வெடித்து சிதறியதால் முகம் முழுவதும் விஷ்ணுவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.