கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த மாதம் இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இங்கு இருந்து தான் செயல்படுகின்றன. மற்ற பேருந்துகளும் இங்கு வந்து தான் சென்னையின் மற்ற பகுதிகளுக்கு செல்கிறது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் முழுமையாக இங்கு இருந்து இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.