உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகின்ற திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் தொடர் விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர் செல்ல ஏதுவாக தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 22ஆம் தேதி கூடுதலாக 350 பேருந்துகளும், டிசம்பர் 23ஆம் தேதி 290 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து நெல்லை, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி மற்றும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும். கோவை, சேலம், கும்பகோணம், மதுரை மற்றும் நெல்லை வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.