அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் மதுரா தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன் என்று நடிகையும் பாஜக எம்பியும் ஆன ஹேமா மாலினி தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையான தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஹேமா மாலினி, நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி விரும்பினால் மதுரா தொகுதியை தர வேண்டும். தனக்கு பகவான் கிருஷ்ணரோடும், அவரது பக்தர்கள் மீதும் அலாதி பிரியம் உண்டு. ஒன்பது ஆண்டு கடின உழைப்பு மூலம் அடுத்த முறையும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.