தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்குவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த 14 ஆயிரம் ரூபாய் நிதி உதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்பட உள்ளது. கர்ப்ப காலத்தில் நான்காவது மாதத்தில் 6000 ரூபாய், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் 6 ஆயிரம் ரூபாய், குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தில் 2000 ரூபாய் ஆக வழங்கப்பட உள்ளன. மேலும் பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதத்தில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.