திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வட அரசம்பட்டு கிராமத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நேற்று அருணாச்சலம் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்றார். பின்னர் காவல் நிலையம் முன்பு உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவருடன் வந்த சிலரும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டதாக தெரிகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் போலீசார் அருணாச்சலத்தை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, குற்ற வழக்குகளில் தொடர்புடைய அருணாச்சலத்தை போலீசார் தேடி வந்தனர். அவர் போலீசார் தன்னை தொந்தரவு செய்வதாக கூறி தற்கொலைக்கு முயன்றனர் என கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.