பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் பக்துங்க்வா  மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காவல் நிலையத்தின் மீது அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையம் மற்றும் சில கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 10 போலீசார் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று கூறப்படுகிறது.