நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருவதால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும் தான் சூரியகாந்தி எண்ணெய், கோதுமை, பார்லி போன்ற பொருட்களின் முக்கிய ஏற்றுமதி மையமாக இருந்தது.

இந்த தானியங்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளுக்கு கருங்கடல் மூலமாக ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 18ஆம் தேதியோடு ரஷ்யா ஒப்பந்தம் கால வாதியாகிவிட்டதாக தெரிவித்துள்ளது. இதற்கு உலக நாடுகளும் ஐ.நாவும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. அதன்படி ரஷ்யாவில் இருக்கும் 35 நிறுவனங்கள் மீது ஆஸ்திரேலியா பொருளாதார தடை விதித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வோங் தெரிவித்துள்ளார்.