உத்திரபிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு தற்போது 60 ஆயிரத்து 244 காலியிடங்கள் உள்ளதாக காவல்துறை ஆள்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி ஆன இன்று முதல் இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறைகள் ஆன்லைன் முறையில் தொடங்கியிருக்கிறது. ஜனவரி 16ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கொரோனா காலத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறாத காரணத்தால் இந்த பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பை 22 லிருந்து 25 ஆக மாற்ற வேண்டும் என்று அம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இளைஞர்கள் இந்த பணிகளுக்கான வயது வரம்பில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைத்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.