இந்தியாவின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளுக்கான கணக்கில் இருந்து குறிப்பிட்ட அளவு பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாத கணக்கிலிருந்து வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் ரூபாய் 228 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதன் பிறகு செல்போன் ஆப்பில் விவரங்களை சோதனை செய்த பிறகு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா திட்டத்திற்கு பணம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான ஒப்புதல் எதுவும் வங்கி கணக்கு உரிமையாளர்களிடமிருந்து பெறப்படவில்லை.

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இதுகுறித்து அதிர்ச்சியில் உள்ளார்கள். இதுபோன்ற சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக sbi வங்கியில் நடந்துள்ளது. இந்த திட்டத்திற்கு பணம் செலுத்துவது குறித்து எந்தவித ரசீதும், பாலிசி குறித்த விதிமுறைகள் நிபந்தனைகள் போன்ற எந்த விவரங்களும் வாடிக்கையாளர்களுக்கு வாங்கி தெரிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வங்கிக்கு அதிக அளவில் புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது.