ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் அன்னமயா மாவட்டம் கே.வி.பள்ளி அருகே செம்மரக்கடத்தலை தடுக்க சென்ற காவலர் பி.கணேஷ் (30) மீது கார் ஏற்றிக் கொலை செய்து விட்டு தப்பிய கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணிக்கு இடையே வேகமாக வந்த காரை தடுத்த போது, காவலர் மீது காரை ஏற்றியுள்ளனர். 3 பேர் தப்பியோடிய நிலையில், இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் அதிலிருந்த 7 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.