மத்திய பிரதேஷ் மாநிலம் மொரேனே மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் ஜதவ். இவர் தனது குடும்பத்தினரிடம் அடிக்கடி தனது நாக்கை காளி மாதாவுக்கு காணிக்கையாக கொடுப்பேன் என்று கூறிவந்துள்ளார். ஆனால் அதனை குடும்பத்தினர் உண்மை என்று நினைக்கவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை அன்று சதீஷ் ஜதவ் எப்போதும் போல் தனது வீட்டில் உள்ளவர்களிடம் தான் தனது நாக்கை காளி  மாதாவிற்கு காணிக்கையாக கொடுக்க போவதாக கூறிவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால் குடும்பத்தினர் இதனை நம்பவில்லை.

இந்நிலையில் காளி மாதா கோவிலுக்கு சென்ற சதீஷ் தனது நாக்கை துண்டாக வெட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்த அவர் அப்பகுதியிலேயே மயங்கி விழுந்துள்ளார். அந்த சமயத்தில் கோவிலுக்கு வந்த ஒருவர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் இளைஞர் சதீஷ் ஜதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.