மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். புனேவில் நேற்று மாலை பைக்கில் சென்ற குடும்பத்தினர் மீது வேகமாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரி மோதியது. இதில், பைக்கில் வந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழ, அதில் வந்த 3 வயதே ஆன இரட்டைக் குழந்தைகள் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்தின் CCTV காட்சிகள் வெளியாகி காண்போரை கலங்க செய்துள்ளது