உத்தர பிரதேச மாநிலப் மீருட் பகுதியில் அமைந்திருந்த சோப் தொழிற்சாலை ஒன்றில் விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த நான்கு பேர் உயிரிழந்ததோடு ஐந்து பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட ஆட்சியர் தீபக் மீனா மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். மேலும் தொழிற்சாலையில் ரசாயன கலவையின் போது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.