“கள ஆய்வில் முதலமைச்சர்” என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி இன்று காலை சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து காந்திநகர் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக செய்யப்பட்ட சிற்றுண்டியை சாப்பிட்டு தரத்தை  ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அலமேலு மங்காபுரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் சிற்றுண்டி சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.