பொதுவாகவே காலையில் எழுந்ததும் பலரும் வெறும் வயிற்றில் டீ காபியுடன் பிஸ்கட் எடுத்துக் கொள்வது வழக்கம்தான். ஆனால் இப்படி செய்வதால் என்ன விளைவு ஏற்படும் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இரவு முழுவதும் காலியாக இருக்கும் வயிறு காலையில் எழுந்தவுடன் சாப்பிடும் பிஸ்கட் செரிமான பிரச்சனையை உண்டாக்கும். பிஸ்கட்டுகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவின் உயர் கிளை செமிக் உங்கள் ரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்தக்கூடும். உப்பு சேர்க்கப்பட்ட குக்கிகள் உங்கள் ரத்த அழுத்த அளவை உயர்த்தும் திறன் கொண்டவை.

அதேசமயம் வெண்ணெய் சேர்க்கப்பட்ட பட்டர் பிஸ்கட்டுகள் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க கூடும். பச்சை மாவு பாக்டீரியா தொற்று பாதிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும் குக்கிகள் உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்.செயற்கை சுவையூட்டிகள் நிறைந்த பிஸ்கட்டுகள் உடலில் கலோரிகளை அதிகப்படுத்துவதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். எனவே காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு அதன் பிறகு 15 நிமிடங்கள் கழித்து மற்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் எந்த ஒரு பிரச்சனையும் உங்களுக்கு ஏற்படாது.