பிரபல இளம் நடிகர் சர்வானந்த் தமிழில் நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். சர்வானந்த் இப்போது கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பி இருக்கிறார். ஐதராபாத்தில் தன் ரேஞ்ச் ரோவர் சொகுசு காரில் சர்வானந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது பிலிம்நகர் சந்திப்பில் ஒரு bike குறுக்கே வந்துவிட்டது.

இந்நிலையில் காரை திருப்பியபோது எதிர்பாராத வகையில் கார் தடுப்பு சுவரில் மோதியது. இதனால் சர்வானந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது லேசான விபத்து தான். அனைவரும் நலமுடன் இருக்கிறோம் என சர்வானந்த் தெரிவித்துள்ளார். அண்மையில் சர்வானந்துக்கு ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இவர்களது திருமணம் இன்னும் சில நாட்களில் ஜெய்ப்பூரில் நடக்க உள்ளது. இந்நிலையில் சர்வானந்த் விபத்தில் சிக்கியதால் அவரது ரசிகர்கள் கவலையடைந்தனர்.