உத்தரபிரதேச மாநிலம் மீருட் பகுதியைச் சேர்ந்தவர் பானு. பலூன் விற்பனையாளரான இவர் சம்பவத்தன்று கார் ஒன்று மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் எஸ்யூவி ரக கார் ஒன்று வேகமாக வந்து பலூன் விற்பனையாளர் மீது மோதிவிட்டு போஸ்ட் கம்பம் ஒன்றில் மோதி நின்றுள்ளது.

அந்த காரில் இருந்து டிரைவர் அனுபவ் அவரது நண்பரும் ஜன்னல் வழியாக இறங்கி தப்பு முயற்சித்த போது டிரைவரை அக்கம் பக்கத்தினர் சூழ்ந்து விட்டனர். பின்னர் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அனுபவ் குடித்துவிட்டு கார் ஓட்டியது தெரியவந்தது.