எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  காப்பீடு உள்ளிட்ட முதலீடுகள் தனிநபர் முடிவுக்கு உட்பட்டது என்றும் வங்கி அதனை திணிக்காது என்றும் SBI வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவர், ஏன் காப்பீடுகளை எங்கள் மீது திணிக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்திருக்கும் எஸ்பிஐ. “வங்கியின் கிளைகள் விழிப்புணர்வுக்காக மட்டுமே காப்பீடு தொடர்பாக பேசுவார்கள். அதனை எடுத்துக் கொள்வது உங்கள் விருப்பம்” என்று கூறியுள்ளது.