ராஜஸ்தானில் மணமகள் காதலனுடன் ஓடிவிட்ட நிலையில் மணமகன் 13 நாட்கள் மண்டபத்திலேயே காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் சவுனா கிராமத்தில் வசித்து வருபவர் சரவண குமார். இவருக்கும் மனீஷா என்பவருக்கும் கடந்த மே 4-ம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்நிலையில், பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடக்க இருந்த நிலையில் திருமண சடங்குகளுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு மனீஷா தனது காதலனுட ஓடிவிட்டார்.

இதனால் மனீஷா மீண்டும் வருவாள் என சரவண குமார் திருமண மண்டபத்தில் 13 நாட்கள் காத்திருந்தார். இறுதியில் மே 15-ம் தேதி அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மணப்பெண் சமாதானம் அடைந்ததை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.