சேலம் மாவட்டம் மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 54 வயதான இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மனைவியை பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து  மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த கிருஷ்ணனின் (54) வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார் பட்டதாரி பெண் விமலா (24).

இப்படியே செல்ல செல்ல ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்ணனை திருமணம் செய்த கையோடு, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்