தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுகொட்டாய் கிராமத்தில் முனிவேல்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் முனிவேல் பாலக்கோடு பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முனிவேல் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!
Related Posts
“வருடத்தின் ஒரு நாள் மட்டுமே அற்புத தரிசனம்!”.. பதினெட்டாம் படி கருப்பண்ணசுவாமி கோவில் நடை திறப்பு..அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!!!!
மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான அழகர்கோவிலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பதினெட்டாம் படி கருப்பண்ணசுவாமி கோயிலின் திருக்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வரும் ஆடிப் பெளர்ணமி திருநாளை முன்னிட்டு இந்தச் சிறப்பு நிகழ்வு வெகு விமரிசையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக வருடத்திற்கு…
Read more“மாணவனை ரத்தம் வர வர அடி வெளுத்த HM” சாதியைச் சொல்லி திட்டியதாக எழுந்த பகீர் புகார்…. திருநெல்வேலியில் வெடித்த மாபெரும் சர்ச்சை….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் கடுமையான ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.…
Read more