தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன தடங்கம் பகுதியில் கோபால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரக்கு ஆட்டோ மூலம் கோவில் திருவிழாக்களுக்கு சென்று ஐஸ் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று இரவு நல்லம்பள்ளி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கோபால்சாமி சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் அதியமான் கோட்டை அருகில் இருக்கும் வானொலி நிலையம் முன்பு சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கோபால்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபால்சாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.