அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா. பலூர் கீழ சிந்தாமணி பகுதியில் கார்த்திக் என்பவர் விசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் உடையார்பாளையத்தில் இருக்கும் தனது நண்பர் வீட்டில் காதலியை தங்க வைத்து கார்த்திக் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கூறியதற்கு கார்த்திக் மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.