வங்கி கொள்ளையை மையாக கொண்டு வெளியான இணையத்தொடர் ‘மணி ஹெய்ஸ்ட்’. இந்த தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த தொடருடன் ஒப்பிட்டு ஒடிசாவில் உள்ள காங்கிரஸ் எம்பி ஒருவருடைய வீட்டில் கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக கைப்பற்றபட்டது. இந்த பணத்தை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளையர்களாக தொடர்ந்து வரும் முன்னோடிகள் அவர்கள். காங்கிரஸ் கட்சி இருக்கும்போது இந்தியாவில் ‘மணி ஹெய்ஸ்ட்’ போன்ற இணைய தொடர்களுக்கு அவசியமே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.