நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த நவலடி ஊராட்சியில் கோடாவிளை  கடற்கரை கிராமம் உள்ளது.  இதில்  உள்ள மஸ்தான் பள்ளிவாசலின் இடதுபுற கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் வடக்கு பகுதியில் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கடந்துள்ளார். இதனை பார்த்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வரைந்து வந்த காவல்துறை அவர் யார் என்று குறித்த விசாரணையில் உடனடியாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து உவரி  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு  பிறகு தான் கொலை காரணம் தெரியவரும்.