திருப்பத்தூர் அருகே பைக்கில் சென்ற பெண்ணின் சேலை பேருந்தில் சிக்கியதில் அவர் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர் மனைவி கடற்கரை தங்கம். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் தம்பதியர் இருவரும் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அரசு பேருந்து ஒன்று இவர்களை கடந்த சமயத்தில் கடற்கரை தங்கத்தின் சேலை காற்றில் பறந்து பேருந்தில் சிக்கிக் கொண்டது. இதில் அவர் 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.