சமீபகாலமாகவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி பலரும் உயிரிழக்கும் செய்தி வெளியாகி கொண்டிருக்கிறது. டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையில் இதுபோன்ற உயிர்பலிகள் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கடலூர் அருகே செப்டிக் டேங்க் குழிக்குள் அமைக்கப்பட்ட சாரத்தை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் மாஞ்சாலையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40) என்பவரது வீட்டில் நடந்த செப்டிக் டேங்க் சென்டரிங் பிரிக்கும் பணியின் போது விஷ வாயு தாக்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கொத்தனார் பாலசந்தர் (32), சக்திவேல்(25) ஆகிய மூவரும் பலியாகியுள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் செப்டிக் டேங்க் குழிக்குள் இருந்த 3 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.