கர்நாடக மாநிலத்தில் உள்ள நேத்ரா ஜோதி கல்லூரியில் பயின்று வரும் மூன்று பெண்கள் ஒரு பெண் கழிவறையில் இருந்த போது வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணிடம் தங்கள் வேறு சில பெண்களை வீடியோ எடுக்கும் முயற்சியில் தவறுதலாக உன்னை எடுத்து விட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் அந்தப் பெண் இது குறித்து கல்லூரியில் மற்ற மாணவர்களிடம் கூறி கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மூன்று மாணவிகளையும் சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. சக மாணவி கழிவறையில் இருந்த போது பெண்கள் வீடியோ எடுத்த சம்பவம் கல்லூரி மாணவிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.