திருவனந்தபுரம் அருகே உள்ள சேங்கோட்டுகோணம் பகுதியை சேர்ந்தவர் சரிதா (46). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். சரிதாவின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதனால் தாயும் மகளும் தனியாக வசித்து வந்துள்ளனர். சரிதாவுக்கும் பவுடிக்கோணம் பகுதியை சேர்ந்த பினு (50) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் சரிதாவை சந்திக்க வந்த பினு அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை சரிதா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது பினு மீதும் தீ பற்றியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பினுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.