கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு பால் விற்பனை செய்தால் முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலை பொதுமக்களுக்கு வழங்காமல் கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.