சென்னையில் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 80 சதவீதம் மின்விநியோகம் சீராகி இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. வட சென்னையில் எம் கே பி நகர், பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளில் 80 சதவீதம் மின் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு குக்ஸ் சாலை, பள்ளிக்கரணையில் 20% பகுதிகளில் விரைவில் மின்விநியோகம் அளிக்கப்படும் என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.