உத்தரபிரதேச மாநிலம் பரேலிக்கு உட்பட்ட பித்ரி செயின்பூரில் முன்னாள் எம்எல்ஏவான ராஜேஷ் குமார் மிஸ்ரா, கடந்த ஆண்டு இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இப்போது பிஏ தேர்வு எழுதுகிறார். பிஏ முதலாம் ஆண்டு இந்தி தேர்வு திங்கள்கிழமை நடந்தது. இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்று தற்போது பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

அதன் பிறகு எல்எல்பி படிக்க விரும்புவதாகவும் கூறினார். சட்டப்படிப்பு முடித்த பின் ஏழை மக்களுக்கு இலவச சட்ட உதவி சேவை வழங்குவேன் என ராஜேஷ் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார். அவருக்கு அம்மாநில மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.