பாஜக ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித் துறை மந்திரியான பாபுலால் கார்டி நேற்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் “பிரதமர் மோடியின் கனவு வீடு இல்லாமலும் பசியுடனும் யாரும் தூங்க கூடாது என்பதுதான்.

அதிக பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள். பிரதமர் மோடி உங்களுக்கு வீடு கட்டி கொடுப்பார். உங்களுக்கு வேறு என்ன பிரச்சனை?” என பேசியுள்ளார். மந்திரி பாபுலாலுக்கு இரண்டு மனைவிகள் 4 மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.