கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதுகுறித்த  வீடியோ வெளியான நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவனும், மாணவியும் கல்லூரியில் உள்ள மொட்டை மாடிக்கு சென்று நெருக்கமாகி உல்லாசமாக இருந்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ அந்த கல்லூரி மாணவர்களின் வாட்ஸ்அப் குழுவில் பரவியுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி அவமானத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி அறிந்த மாணவனும் தற்கொலை செய்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.