கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பில்லாரி அக்காரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் ஓசூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர் கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார். கல்லூரிக்குப் போகாததை கேட்டு இவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த ஏழுமலை விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். அவரை மீட்டு குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.