நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று விடுதலை கட்சியினர், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் வாழ்ந்து வரலாறு படைத்த முன்னோர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கி பேசியுள்ளார்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தின் போது காரில் வந்த இரண்டு பேர் சீமானின் உருவப் பொம்மையை எரித்ததால்  அங்கு பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கிடையே உருவமைப்பு தொடர்பாக போலீசார்  எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.